சரஸ்வதி நிவாஸ் நினைவுகள்

வெள்ளி, 14 நவம்பர், 2008

தமிழில் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று இப்போதுதான் தெரிகிறது. உண்மையை சொன்னால் எழுதுவதே கஷ்டம். அதிலும் விஷயம் இல்லாமல் ரொம்ப கஷ்டம். பாவம் என் ஸ்கூல் வாத்யார். ஏதோ செய்து பாஸ் போட்டுவிட்டார்கள். என் கையெழுத்த்ுக்காகவே என்னை டாக்டர் ஆக்கி இருக்கலாம். பியெஸ்ஸி சீட் கிடைத்தத்து. நோயாளிகள் பிழைத்ததாங்க.ஆனால் என் கையெழுத்து ரொம்ப வசதியாய் இருந்தது. ஆங்கிலம் ஸ்பெல்லிங் தெரியல்லைன்னா கோழி கிறுக்கல் காப்பாற்றும். வாத்யார் வகுப்பில் திட்டுவார். ஆனா மார்க் குறைக்காமாட்டார். நல்ல கையெழுத்து இருந்த பசங்க காலி. க்ளாஸ் தீச்செருக்கு பேர் வெக்கரது ஒரு கலை. எல்லா பசங்களுக்கும் வராது. ஒரு சின்ன சம்பவம்.ஒரு வாத்யார் சேரில் யாரோ ஒரு பை இருந்தது. அவர் அந்த பையை கையில் எடுத்துக்கொண்டு யார்த்ரா பை என்று மறுபடியும் மறுபடியும் கேட்டார். அன்றிலிருந்து அவர் பேர் திராபை ஆகிவிட்டது. (சொல்லாகு பெயர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக